நமது உடலில் அமைந்துள்ள ஆதாரங்கள் ஆறு

அடியவர்களின் வினைகளை தீர்க்கின்ற முகம் ஒன்று.பன்னீர் இலையில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது
நமது உடலில் அமைந்துள்ள ஆதாரங்கள் ஆறு
Published on

நமது உடலில் அமைந்துள்ள ஆதாரங்கள் ஆறு. அவை முறையே மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை. இந்த ஆறு ஆதாரங்களிலும் முருகன் வீற்றுள்ளான்.

மூலாதாரம்-திருப்பரங்குன்றம்

சுவாதிஷ்டானம்-திருச்செந்தூர்

மணிபூரகம்-திருவாவினன்குடி

அநாகதம்-திருவேரகம்

விசுத்தி-குன்று தோறாடல் (திருத்தணி)

ஆக்ஞை-பழமுதிர்சோலை

ஆறுமுகம்

முருககப் பெருமானை ஆறுமுகம் என்று சொல்லு வோம். அந்த ஆறுமுகம் என்னென்ன?

1. சிவனுக்கு ஞானமொழியாக, ஓங்காரத்தில் பொருளை விளக்கிய பேசும் முகம் ஒன்று.

2. வள்ளியைத் திருமணம் செய்ய வந்த முகம் ஒன்று.

3. அடியவர்களின் வினைகளைத் தீர்க்கின்ற முகம் ஒன்று.

4. குன்றில் சம்ஹாரம் செய்ய அன்னையிடம் வேல் வாங்கிய முகம் ஒன்று.

5. சூரனை வதைத்த முகம் ஒன்று.

6. வாகனமான மயில் மீது ஏறி விளையாடும் முகம் ஒன்று.

பன்னீர் இலை பிரசாதம்

திருச்செந்தூரில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் முருகப் பெருமானின் திருக்கோவிலில் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கப்படுகிறது. இது வேறெங்கும் காண முடியாத சிறப்பாகும்.

இத் தலத்தில் நான்கு வேதங்களும் பன்னீர் மரங்களாக மாறிச் செந்தில் முருகனை வழிபடுவதாக ஓர் ஐதீகம் நிலவுகிறது. அதற்கேற்றாற் போல பன்னீர் மரங்கள் மிகுந்த அளவில் இங்குண்டு. விஸ்வாமித்திரரைப் பிடித் திருந்த குன்ம நோய் இந்த பன்னீர் இலை விபூதியால் குணமானதாக நம்பப்படுகிறது.

முருகன் கண்ட பாக்கிய சாலிகள்

அகத்தியர், நக்கீரர், சிகண்டி முனிவர், நல்லியக்கோடன், ஒளவையார், முருகம்மையார், பொய்யாமொழிப் புலவர், சிதம்பர சுவாமிகள், ஞாவைரோதயர், பகழிக்கூத்தர், கவிராஜ பிள்ளை, குமரகுருபரர், மார்க்க சகாயதேவர், குணசீலர், ராமலிங்க அடிகள், முருகதாச சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள், அருணகிரிநாதர், கச்சியப்பர், வாரியார் சுவாமிகள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com