கணபதி ஹோமம்

கணபதிக்கும், அனுமனுக்கும் சூரிய பகவான் தான் குரு. அகத்தி இலை-துயரம் தீரும். தாழை இலை- கோபம் நீங்கும்.
கணபதி ஹோமம்
Published on

கணபதிக்கும், அனுமனுக்கும் சூரிய பகவான் தான் குரு. இருவரும் வேதங்களை சூரியதேவனிடம் கற்றவர்கள். கணபதி காலையில் சூரிய உதயகாலத்தில் சூரியனை வணங்கி, குருபூஜை செய்யும் சமயம் என்பதால்,கணபதி ஹோமம் நடத்துபவர்கள் அதிகாலை பிரம்மமுகூர்த்தமான நாலரை மணிக்கே ஆரம்பித்து ஆறுமணிக்குள், அதாவது சூரியன் உதிக்கும் முன் முடிப்பது என்பது சம்பிரதாயம். எனவே தான், புதுமனை புகுவிழா நடத்துபவர்கள் சூரிய உதயத் திற்கு முன்னரே கணபதி ஹோமம் செய்து பூஜை நடத்தி முடிக்கின்றனர்.

விநாயகர் திருமணம்

விநாயகர் புத்தியும் சித்தியும் என்று இரு மனைவியரை மணந்து வாழ்ந்தார் என்று புராணக்கதை உண்டு. புத்தி என்பது ஞானமும், அறிவும் குறிக்கும்.சித்தி-என்பது திறமை,முன்னேற்றம் மற்றும் வெற்றி ஆகியவற்றை குறிக்கும் என்பது சமயப்பெரியோர்கள் கூற்று.

மணக்குள விநாயகர் ஆலயத்தில் சித்திபுத்தி விநாயகருக்கு திருமணம் செய்து வைப்பதை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செய்கிறாய்கள். விநாயகருக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுவது இந்த தலத்தில் மட்டுமே நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விநாயகருக்கு அர்ச்சனை செய்யும் இலைகள்

விநாயகருக்கு என்னென்ன இலைகளைக்கொண்டு அர்ச்சனை செய்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்று வேத நூல்கள் தெரிவிக்கின்றன.

மருதஇலை-மகப்பேறு.

அரசு இலை-எதிராளி அடங்குவான் வீண்பழி வாராது.

அகத்தி இலை-துயரம் தீரும்.

தாழை இலை- கோபம் நீங்கும்.

கண்டங்கத்தரி- நற்புகழ் வாய்க்கும்.

வில்வஇலை- இன்ப வாழ்வு மலரும்.

வன்னிஇலை- முகம் ஓளிவீசும்.

வெள்ளெருக்குஇலை- சௌபாக்கியம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com