புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன் அருள் பெற

அம்மன் படத்தை வைத்து தியானம் செய்தால் மிக எளிதாக அம்மன் அருள் பெறலாம்.நாமத்தை குறைந்தது 108 முறை உச்சரித்தால் அம்மன் பரிபூரண அருள் தானாக வந்து சேரும்.
புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன் அருள் பெற
Published on

புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மனின் அருளை பெற பல வழிகள் உள்ளது. அம்மன் படத்தை வைத்து தியானம் செய்தால் மிக எளிதாக அம்மன் அருள் பெறலாம். கோவிலுக்கு சென்று வரும்போது, அம்மனின் படம் கிடைத்தால் வாங்கி வைத்துக்கொண்டு எதிரில் வைத்து அதன் உருவ அமைப்பை மனதில் நிலை நிறுத்தி, தியான மந்திரம் தெரிந்தால் தியானம் செய்யலாம் இல்லை எனில் எவ்வித சலனத்துக்கும் இடமில்லாத வகையில்

ஓம் சக்தி! அங்காளம்மா!!

அங்காளம்மா! ஓம் சக்தி!!

அம்மா தாயே! அருள் புரிவாயே!!

அருள்புரிவாயே! அம்மா தாயே!!

ஜெயமே ஜெயம்! அங்காளியே ஜெயம்!!

ஜெயம் ஓம் ஜெயம்! அங்காளியே ஜெயம்!!

ஜெய் ஜெய் அங்காளி!

ஜெயமே ஜெயம் அங்காளி

- என்ற எளிய நாமத்தை குறைந்தது 108 முறை உச்சரித்தால் அம்மன் பரிபூரண அருள் தானாக வந்து சேரும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com