ஆடி மாதம்-அம்பிகை மாதம்

“பரா’ என்றால் அளவிட முடியாதது என்பது பொருள். அளவிடவே முடியாத சக்தியின் இருப்பிடமாகத் திகழ்வதால் அம்பிகை பராசக்தி எனப்பட்டாள்.
ஆடி மாதம்-அம்பிகை மாதம்
Published on

ஆடி மாதத்தில் அம்பிகை வழிபாட்டை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

அவள் பராசக்தியாக விளங்குகிறாள்.

பராசக்தி என்பதற்குரிய விளக்கத்தையும் நாம் தெரிந்து கொண்டாக வேண்டுமே! படிப்போமா!

ஆதியில் ஒளி தோன்றியது. அந்த ஒளியில் ஆதிசக்தி தோன்றினாள்.

படைக்கும் கடவுளாக பிரம்மனையும், காக்கும் கடவுளாக விஷ்ணுவையும், அழிக்கும் கடவுளாக சிவனையும் படைத்தவள் சக்தியே.

அந்த ஆதிசக்தியே கல்விக்குரிய கலைமகளாக, செல்வத்திற்குரிய அலைமகளாக, வீரத்திற் குரிய மலைமகளாகவும் ஆட்சி செய்கிறாள்.

தாய்க்கெல்லாம் தாயாக இருக்கும் இந்த சக்தி உயர்ந்தவள் என்பதாலேயே, மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தாயை முதன்மையாக வைத்தார்கள்.

அன்னையில்லாமல் இந்தப் பிள்ளை இல்லை என்னும் வழக்கும் இதனால் தான் உண்டானது.

இந்த ஆதிசக்தியை பராசக்தி என்றும் வழங்குவர்.

"பரா' என்றால் அளவிட முடியாதது என்பது பொருள்.

அளவிடவே முடியாத சக்தியின் இருப்பிடமாகத் திகழ்வதால் அம்பிகை பராசக்தி எனப்பட்டாள்.

இவளே ஆலயங்களில் அருள் செய்கிறாள்.

X

Maalai Malar
www.maalaimalar.com