search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்பு படம்.

    பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

    • கல்வித்துறை அறிவிப்பு
    • அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கிய பின் அரசுஉதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இடம் வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து புதுவை, காரைக்காலில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் பணி இன்று தொடங்குகிறது.

    வரும் 17-ந் தேதிக்குள் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் தாங்கள் சேர விரும்பும் பள்ளிகளை நேரில் அணுகி பெற்று, பூர்த்தி செய்து வரும் 9-ந் தேதி மாலை 4 மணிக்குள்விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். அதற்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

    விண்ணப்பங்கள் பெற்ற பின் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் 12-ந் தேதி காலை 9 மணிக்கு அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்படும். அன்றே நேர்காணல் தேதி, நேரம் அறிவிக்கப்படும். மறுநாள் 13-ந் தேதி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு, மதிப்பெண் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படும்.

    ஒவ்வொரு நாளின் இறுதியில் மீதமுள்ள இடங்கள் பட்டியல் வெளியிடப்படும். அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரவரிசை 14-ந் தேதி வெளியிடப்பட்டு நேர்காணல் தேதி அறிவிக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கிய பின் அரசுஉதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இடம் வழங்கப்படும்.

    தனியார் பள்ளி மாணவர்களின் தரவரிசை பட்டியல் 16-ந் தேதி வெளியிடப்படும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடம் வழங்கிய பின் மீதமுள்ள இடங்கள் தகவல் பலகையில் வெளியிடப்படும். 17-ந் தேதி மதிப்பெண் இடஒதுக்கீடு முறையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும்.

    இந்த தகவலை கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அறிவித்துள்ளார். மாணவர் சேர்க்கை தொடர்பாக பள்ளிகளில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த குழுவை அணுகி சந்தேகங்களை தீர்க்கலாம்.

    பிளஸ்-1 வகுப்பில் சேர மதிப்பெண் பட்டியல், மாற்று, குடியுரிமை சான்று, பெற்றோர்களுடன் மாணவர்கள் வர வேண்டும். வகுப்புகள் அடுத்தமாதம் 19-ந் தேதி தொடங்கும்.

    Next Story
    ×