search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
    X

    கோப்பு படம்.

    தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

    • அதே பகுதியை சேர்ந்த வாலிபர் சரத்பாபு என்பவர் வெங்கடேசனை மது குடிக்க அழைத்தார்.
    • இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை உடையார் தோட்டம் ஏழை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது55). பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஆரோக்கியமேரி. இவர் கடந்த 3 ஆண்டுகளாக பிரான்சில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    இவர்கள் வில்லியனூர் பெரியபேட்டில் உள்ள வெங்கடேசனின் மாமியார் வீட்டில் தங்கி வசித்து வருகிறார்கள். வெங்கடேசன் தனது தாய் அஞ்சலையுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை வெங்கடேசன் அங்குள்ள கோவில் அருகே நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் சரத்பாபு என்பவர் வெங்கடேசனை மது குடிக்க அழைத்தார். அதற்கு வெங்கடேசன் மறுத்துவிட்டார்.

    இதையடுத்து சரத்பாபு மது குடிக்க வரவில்லை என்றால் தனக்கு மது குடிக்க பணம் தரவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். ஆனால் வெங்கடேசன் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சரத்பாபு அங்கு கிடந்த தடியை எடுத்து வெங்கடேசனை சரமாரியாக தாக்கினார். அதோடு கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் திரண்டு வரவே சரத்பாபு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்பாபுவை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×