search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு அக்கறையுடன் செயல்படுகிறது
    X

    கோப்பு படம்.

    உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு அக்கறையுடன் செயல்படுகிறது

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி பேட்டி
    • ரூ.9 கோடியில் சாலை பணி களுக்கும் இன்று பூமி பூஜை போடப்பட்டு, பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதியில் ரூ.4 கோடியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உட்பட பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்வ தற்கான பூமிபூஜை விழா இன்று நடந்தது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து சேதராப்பட்டில் ரூ.13 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் பணி, தொண்ட மாநத்தம் கிராமத்தில் ரூ.22 லட்சத்தில் தார்சாலை, கழிவுநீர் வாய்க்கால் பணி உட்பட பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை செய்து வைத் தார்.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊசுடு தொகுதியில் நல்ல குடிநீர் வழங்கு வதற்காக ரூ.4 கோடியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மக்களுக்கு தரமான, சுத்தமான நல்ல குடிநீர் வழங்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். அண்ணா சாலையில் ரூ.9 கோடியில் சாலை பணி களுக்கும் இன்று பூமி பூஜை போடப்பட்டு, பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.

    புதுவை மாநிலத்தில் உள்கட்டமைப்பு மேம் படுத்த அரசு அதிக அக்கறை செலுத்தி செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து நிருபர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் ரசாயான தொழிற்சாலை விபத்து குறித்து கேள்வி எழுப்பி னர். அதற்கு பதில் அளிக்காமல் ரங்கசாமி அங்கிருந்து சென்றார்.

    Next Story
    ×