search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஸ்ரீமத் ஆழ்வார் சபையில் சீதா ராமர் திருக்கல்யாணம்
    X

    திருக்கல்யாணம் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்ற காட்சி. 

    ஸ்ரீமத் ஆழ்வார் சபையில் சீதா ராமர் திருக்கல்யாணம்

    • திரளான பக்தர்கள் தரிசனம்
    • ஸ்ரீ சீதா ராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை தெபாசம்பேட் வீதி, ஸ்ரீமத் ஆழ்வார் சபையில் உள்ள ஸ்ரீ வேணுகோபால்சாமி தேவஸ்தான பிரகார வளாகத்தில் ஸ்ரீமதி ருக்மணி தேவி மண்டபத்தில், ஸ்ரீ சீதா ராமர் சன்னதியாகவும், உற்சவ மூர்த்தியாகவும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக ஸ்ரீ சீதா ராமர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஸ்ரீ சீதா ராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பெண் அழைப்பு நடத்தப்பட்டு திருக்கல்யாணம் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×