search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை மல்யுத்த விளையாட்டுக்கு  அங்கீகாரம்
    X

    மல்யுத்த வீரர்-வீராங்கணைகளுக்கு அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்ட காட்சி.

    புதுவை மல்யுத்த விளையாட்டுக்கு அங்கீகாரம்

    • பள்ளி விளையாட்டில் மல்யுத்தத்துக்கு அங்கீகாரம் கிடைத்தது மாணவ- மாணவிகளுக்கு வரப்பிர சாதமாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.
    • விளையாட்டு நல இணை இயக்குநர் சிவக்குமார் 4 அங்கீகார சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

    புதுச்சேரி:

    இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு மூலம் நடைபெற்ற 66-வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டியில் மல்யுத்த பிரிவில் புதுச்சேரி அரசு இளைஞர் மற்றும் விளையாட்டு துறை சார்பில் பங்குபெற்ற மல்யுத்த வீரர்- வீராங்கனைகளுக்கு புதுச்சேரி மல்யுத்த சங்க நிறுவன செயலாளர் மாஸ்டர் வினோத் முன்னிலையில் இளைஞர் மற்றும் விளையாட்டு நல இணை இயக்குநர் சிவக்குமார் 4 அங்கீகார சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

    இதுகுறித்து புதுச்சேரி மல்யுத்த சங்க செயலாளர் மாஸ்டர் வினோத் கூறும் போது 4 வருட போராட்டத்தின் பலனாக பள்ளி விளையாட்டில் மல்யுத்தத்துக்கு அங்கீகாரம் கிடைத்தது மாணவ- மாணவிகளுக்கு வரப்பிர சாதமாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியின் போது பொருளாளர் சோமசுந்தரம், நிர்வாகிகள் ஜான், ஜெயஸ்டூ, வசந்த், மற்றும் பயிற்சியாளர்கள் சிவசங்கரி, தயாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×