search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரேஷன்கடைகளை அறிவித்தபடி திறக்க வேண்டும்-மார்க்சிஸ்டு வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    ரேஷன்கடைகளை அறிவித்தபடி திறக்க வேண்டும்-மார்க்சிஸ்டு வலியுறுத்தல்

    • ரேஷன் கடைகளை மீண்டும் திறக்கப் போவதாக முதல்-அமைச்சர் 3-வது முறையாக சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
    • ஊழியர்களுக்கு 5 மாத ஊதியத்தை அளிக்க உள்ளதாகவும் அறிவித்திருப்பதை நம்பிக்கையோடு மார்க்சிஸ்டு வரவேற்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மார்க்சிஸ்டு கட்சியின் செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ரேஷன் கடைகளை மீண்டும் திறக்கப் போவதாக முதல்-அமைச்சர் 3-வது முறையாக சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். மேலும் 5 மாத ஊதியம் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். ரேஷன்கடைகளை திறக்க வேண்டும் என பல கட்ட போரட்டங்களை மார்க்சிஸ்டு கட்சி நடத்தியுள்ளது.

    சட்டமன்றத்திலும், வெளியிலும் பல முறை முதல்-அமைச்சர், ரேஷன்கடைகளை திறப்போம் என அறிவித்தும் நடைமுறைக்கு வரவில்லை. நீண்ட போராட்டத்தால் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் ரங்கசாமி 3-வது முறையாக மீண்டும் ரேஷன் கடைகளை திறக்கப் போவதாகவும், ஊழியர்களுக்கு 5 மாத ஊதியத்தை அளிக்க உள்ளதாகவும் அறிவித்திருப்பதை நம்பிக்கையோடு மார்க்சிஸ்டு வரவேற்கிறது.

    முதல்-அமைச்சர் வாக்குறுதிப்படி ரேஷன் கடைகளை திறக்க வேண்டும். ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 55மாத ஊதியத்தை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×