என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
ரேஷன்கடைகளை அறிவித்தபடி திறக்க வேண்டும்-மார்க்சிஸ்டு வலியுறுத்தல்
- ரேஷன் கடைகளை மீண்டும் திறக்கப் போவதாக முதல்-அமைச்சர் 3-வது முறையாக சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
- ஊழியர்களுக்கு 5 மாத ஊதியத்தை அளிக்க உள்ளதாகவும் அறிவித்திருப்பதை நம்பிக்கையோடு மார்க்சிஸ்டு வரவேற்கிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில மார்க்சிஸ்டு கட்சியின் செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரேஷன் கடைகளை மீண்டும் திறக்கப் போவதாக முதல்-அமைச்சர் 3-வது முறையாக சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். மேலும் 5 மாத ஊதியம் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். ரேஷன்கடைகளை திறக்க வேண்டும் என பல கட்ட போரட்டங்களை மார்க்சிஸ்டு கட்சி நடத்தியுள்ளது.
சட்டமன்றத்திலும், வெளியிலும் பல முறை முதல்-அமைச்சர், ரேஷன்கடைகளை திறப்போம் என அறிவித்தும் நடைமுறைக்கு வரவில்லை. நீண்ட போராட்டத்தால் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் ரங்கசாமி 3-வது முறையாக மீண்டும் ரேஷன் கடைகளை திறக்கப் போவதாகவும், ஊழியர்களுக்கு 5 மாத ஊதியத்தை அளிக்க உள்ளதாகவும் அறிவித்திருப்பதை நம்பிக்கையோடு மார்க்சிஸ்டு வரவேற்கிறது.
முதல்-அமைச்சர் வாக்குறுதிப்படி ரேஷன் கடைகளை திறக்க வேண்டும். ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 55மாத ஊதியத்தை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்