search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    4-வது முறையாக செந்நிறமாக மாறிய புதுச்சேரி கடல்- பொதுமக்கள் பீதி
    X

    செந்நிறமாக மாறிய புதுச்சேரி கடல்.

    4-வது முறையாக செந்நிறமாக மாறிய புதுச்சேரி கடல்- பொதுமக்கள் பீதி

    • நுண்ணுயிர்கள் பெருக்கத்தால் இந்த மாற்றம் ஏற்படுவதாக ஏற்கனவே கடல் ஆராய்ச்சியாளர் தெரிவித்திருந்தார்.
    • அரசு முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கடல்பகுதி கடந்த 2 தினங்களாக அலை சீற்றத்துடன் காணப்பட்டது.

    புதுவை பழைய சாராய ஆலை முதல் வைத்திக்குப்பம் மாசிமக திடல் வரை ஒரு கி.மீ. நீளத்துக்கு கடல் நீர் மீண்டும் செந்நிறமாக காட்சி அளிக்கிறது.

    இதை சுற்றுலா பயணிக ளும், உள்ளூர் மக்களும் ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர்.

    4-வது முறையாக புதுவை கடல் செந்நிறமாக காட்சி அளிக்கிறது.

    ஏற்கனவே கடந்த மாதம் 17-ந் தேதி முதல்முறையாகவும், 19-ந் தேதி 2-வது முறையாகவும், கடந்த 1-ந் தேதி 3-வது முறையாகவும் கடல் செந்நிறமாக காட்சியளித்தது.

    இந்நிலையில் இன்று 4-வது முறையாக கடல் செந்நிறமாக மாறியது.

    கடலில் ஏற்பட்டுள்ள நுண்ணுயிர்கள் பெருக்கத்தால் இந்த மாற்றம் ஏற்படுவதாக ஏற்கனவே கடல் ஆராய்ச்சியாளர் தெரிவித்திருந்தார்.

    இருப்பினும் புதுவையில் அடிக்கடி கடல் நீர் செந்நிறமாக மாறும் சம்பவம் மீனவர்கள் மற்றும் பொது மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து அரசு முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×