என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
ஜோதி சிலம்பம் குருகுலத்தில் முப்பெரும் விழா
- பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் குருகுலத்தில் நடந்த விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- குழந்தைகள் அமைப்பின் செயலாளர் ஜெகநாதன், ஆதரவற்றவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த சந்திரகுரு ஆகியோருக்கு சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை அரசு கலை மாமணி விருதாளர் சங்கம் சார்பில், நாட்டிய கலை விழா, தாய்மொழி தினம், சேவை நிறுவன தினம் ஆகியவை முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் குருகுலத்தில் நடந்த விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாட்டிய கலை ரத்னா, சேவை ரத்னா, தாய்மொழி ரத்னா ஆகிய விருதுகளை வழங்கினார்.
முன்னதாக, தமிழ்வாணன் வரவேற்றார். ஜோதி செந்தில் கண்ணன் முன்னிலை வகித்தார். விசித்ரா தலைமை தாங்கினார்.
ஓவியர் அரியபுத்திரி, சுவாமிதாசன், சரவணன், ரவி, சகாதேவன், ராஜாராம், நெல்லை, ராஜன், பேராசிரியர் சிவக்குமார், தட்சிணாமுர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினார்.
விழாவில், 103 முறை ரத்ததானம் செய்த வெற்றிச்செல்வம், உயிர்த்துளி அமைப்பின் நிறுவனர் பிரபு, குழந்தைகள் அமைப்பின் செயலாளர் ஜெகநாதன், ஆதரவற்றவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த சந்திரகுரு ஆகியோருக்கு சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது.
வேலு ஞானமூர்த்தி, ரேகா ராஜா ஆகியோருக்கு தாய்மொழி ரத்னா விருதையும், பக்தன், சாத்வீக காயத்திரி ஆகியோருக்கு நாட்டிய ரத்னா விருதையும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்