என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
ஓடும் ரெயிலில் ஓவியப் போட்டி-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
- உலக மகளிர் மாத விழிப்புணர்வு விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கேற்று ஓடும் ரெயிலில் ஓவியம் வரைந்தார்கள்.
புதுச்சேரி:
அரிச்சுவடி மனநல மையம் மற்றும் ரோட்டரிக் கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரஞ்சிட்டி சார்பில் உலக மகளிர் மாத விழிப்புணர்வு விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.
அரிச்சுவடி மனநல மைய இயக்குனர் டாக்டர் இளவழகன் சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும் சபாநாயகருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கேற்று ஓடும் ரெயிலில் ஓவியம் வரைந்தார்கள்.
ரோட்டரிக் கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரஞ்சிட்டி தலைவர் சதிஷ்குமார் செயலாளர் சீனிவாசன், பொருளாளர் சரவணன் ரோட்டரிக் துணை கவர்னர் மதிவாணன், கோதை சதிஷ்குமார், அரசமாதேவி, ரவிச்சந்திரன் கேக்வெட்டி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கினார்கள்.
மேலும் ஓவியப்போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ரோட்டரிக் முன்னாள் தலைவர்கள் சாதிக், ராம்பிரகாஷ் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், செந்தில், ஏழுமலை, பிரசாந்த், பாபு ராமசந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி ஊழியர்கள் மற்றும் அரிச்சுவடி மனநல மைய ஊழியர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்