என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பச்சைவாழியம்மன் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
- தீமிதி திருவிழா, வரும் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கிறது.
- செயலாளர் கலியபெருமாள், பொருளாளர் செந்தில்குமார், உறுப்பினர் கனகராஜ் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் அடுத்த கன்னியக்கோவிலில், பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், தீமிதி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி, மாலை 6.00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, இரவு 8 மணியளவில் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றி, மகா தீபாராதனை நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா, வரும் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கிறது.இதனையொட்டி, 12.00 மணிக்கு சுப்ரமணியர் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், 5.00 மணிக்கு தீ மிதி திருவிழாவும் நடக்கிறது. 12-ம் தேதி தெப்பல் உற்சவம், 13-ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் தனசேகரன், துணை தலைவர் ஜீவகணேஷ்,செயலாளர் கலியபெருமாள், பொருளாளர் செந்தில்குமார், உறுப்பினர் கனகராஜ் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்