என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
புதுச்சேரியில் நார்வே நாட்டு தபால்காரர் தற்கொலை
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜலட்சுமியின் மகள் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டார்.
- ராஜலட்சுமி கொடுத்த புகாரின் முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பம் ஆர்.கே.நகரை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது38). இவர் கணவரை விட்டு பிரிந்து தற்போது புதுவை முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே ராஜலட்சுமி கடந்த ஆண்டு நார்வே நாட்டு தபால் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சந்திரகுமார்(56) என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார். சந்திர குமார் 3 மாதத்துக்கு ஒரு புதுவைக்கு வந்து செல்வார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜலட்சுமியின் மகள் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து ராஜலட்சுமி நார்வே நாட்டில் வேலை பார்த்து வரும் சந்திரகுமாரிடம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சந்திரகுமார் கடந்த 26-ந் தேதி புதுவை வந்தார். சம்பவத்தன்று சந்திரகுமாருக்கும் ராஜலட்சுமிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சந்திரகுமார் படுக்கை அறைக்கு சென்று உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.
வெகு நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ராஜலட்சுமி ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது சந்திரகுமார் மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து சந்திரகுமாரை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சந்திரகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ராஜலட்சுமி கொடுத்த புகாரின் முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்