search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கஸ்தூரிபாய் காந்தி செவிலியர் கல்லூரியில் தேசிய மாநாடு
    X

    கஸ்தூரி பாய்காந்தி செவிலியர் கல்லூரி பேராசிரியை கீதா வரவேற்புரையாற்றிய காட்சி.

    கஸ்தூரிபாய் காந்தி செவிலியர் கல்லூரியில் தேசிய மாநாடு

    • ஸ்ரீ ராமச்சந்திரா செவிலியர் கல்லூரியின் முதல்வர் நளினி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    • இதில் ஏராளமான செவிலிய பேராசிரியர்கள், செலவி லியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    பாகூர், ஜூன்.19-

    ஸ்ரீபாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழகத்தின் கீழ் பிள்ளையார்குப்பத்தில் இயங்கும் மகாத்மாகாந்தி மருத்துவ கல்லூரி வளாகத்தில் கஸ்தூரிபாய் காந்தி செவிலியர் கல்லூரி உள்ளது.

    இக்கல்லூரியில் செவிலிய ஆராச்சியை வெற்றிகரமாக மாற்று வதற்கான வழிதடங்கள் என்ற தலைப்பில் தேசிய மாநாடு நடைபெற்றது.

    நிகழச்சிக்கு ஸ்ரீபாலாஜி வித்யாபீத் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நிஹார் ரஞ்சன் பிஸ்வாஸ் தலைமை தாங்கி உரையாற்றினார். ஸ்ரீ ராமச்சந்திரா செவிலியர் கல்லூரியின் முதல்வர் நளினி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.

    கிறிஸ்டியன் செவிலியர் கல்லூரியின் பேராசிரியர் மனோரஞ்சிதம் சத்தியசீலன் கவுரவ விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    இந்த தேசிய மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள செவிலியர் கல்லூரிகளில் இருந்து செவிலியர் நிபுணர்கள், பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். இதில் ஏராளமான செவிலிய பேராசிரியர்கள், செலவிலியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    முன்னதாக கஸ்தூரி பாய்காந்தி செவிலியர் கல்லூரி பேராசிரியை கீதா வரவேற்புரையாற்றினார். முடிவில் பேராசிரியை ஆனிஅன்னாள் நன்றி கூறினார்.

    Next Story
    ×