search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வைரஸ் காய்ச்சலை தடுக்க கொசு மருந்து தெளிக்கும் பணி
    X

    தி.மு.க. பொறுப்பாளர் கோபால் ஏற்பாட்டால் வைரஸ் காய்ச்சலை தடுக்கும் வகையில் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்ற காட்சி.

    வைரஸ் காய்ச்சலை தடுக்க கொசு மருந்து தெளிக்கும் பணி

    • புதுவையில் கொசு பெருக்கம் காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
    • தொகுதி தகவல் தொழிநுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விமல், தொகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் யோகேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கொசு பெருக்கம் காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.

    அதனை தடுக்கும் வகையில் உருளையன்பேட்டை தொகுதியில் தி.மு.க. பொறுப்பாளர் கோபால் கொசு மருந்து தெளிக்கும் பணியை தொகுதி முழுவதும் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக சஞ்சய் காந்தி நகர், சுப்பையா நகர் கிளை பகுதிகளில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் மாநில மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் குரு, மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மன், உருளையன்பேட்டை தொகுதி அவைத் தலைவர் ஆதி நாராயணன், தொகுதி துணை செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் சசிகுமார்,

    மாநில பிரதிநிதி பொன்னுசாமி, கிளை தி.மு.க. செயலாளர்கள் முருகன், முத்து, அந்தோனி, கருணாகரன், சரவணன், குருசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மூர்த்தி, ராஜேந்திரன், தேவா, அன்பு, பிரகாஷ், கோபால கிருஷ்ணன், அய்யப்பன், வினோத், தொகுதி தகவல் தொழிநுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விமல், தொகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் யோகேஷ் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

    Next Story
    ×