search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பெரிய மார்க்கெட்டில் கூடுதல் வசதிகளை செய்ய வேண்டும்-மார்க்சிஸ்டு வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    பெரிய மார்க்கெட்டில் கூடுதல் வசதிகளை செய்ய வேண்டும்-மார்க்சிஸ்டு வலியுறுத்தல்

    • அரசின் பல கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று தெரியவில்லை.
    • பெரிய மார்க்கெட் கட்டிடத்தை பழமை மாறாமல் கூடுதல் வசதிகளுக்கு மட்டும் புதிய கட்டுமானத்தை செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெரிய மார்க்கெட் கட்டுமான பணியை 6 மாதத்தில் முடித்து விடுவோம், அதுவரை வேறு இடத்திற்கு செல்லுங்கள் என வியாபாரிகளிடம் அரசு சொல்வது ஏமாற்று வேலையாகும். அரசின் பல கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று தெரியவில்லை.

    இப்படிப்பட்ட நிலையில் அரசு சொல்வதை நம்பி பெரிய மார்க்கெட்டை காலி செய்து விட்டால் வியாபாரிகளும் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்க ளும் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்க கூடிய நிலை ஏற்படும் என அஞ்சுகிறார்கள்.

    எனவே அரசு வியாபாரி களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்தும் அவர்களின் கோரிக்கையை ஏற்று செயல்படுத்த வேணடும். வியாபாரிகளுக்கு பாதிப்பு வராத வகையிலும், பாரம்பரியமான பெரிய மார்க்கெட் கட்டிடத்தை பழமை மாறாமல் கூடுதல் வசதிகளுக்கு மட்டும் புதிய கட்டுமானத்தை செய்ய வேண்டும்.

    மேலும் தற்போது அங்கு வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் குறித்து முழுமையான அனைத்து விவரங்களும் பெற்று அவர்களுக்கே அந்த இடத்தை மீண்டும் ஒப்படைக்கும் வகையில் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×