என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.40 லட்சம் கடனுதவி
- செந்தில்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
- மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
புதுச்சேரி:
பாகூர் சட்டமன்ற அலுவலகத்தில் புதுவை அரசின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் புதுச்சேரி மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பாகூர் தொகுதியைச் சார்ந்த பாகூர் கிழக்கு, மேற்கு, குருவிநத்தம், பரிக்கல்பட்டு.
சோரியங்குப்பம், மதிகிருஷ்ணாபுரம், மணப்பட்டு, புதுக்குப்பம் ஆகிய 8 பஞ்சாயத்துக்களின் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் செந்தில்குமார் எம்.எல்.ஏ தலைமை தாங்கி கடன் உதவி வழங்கினார். இந்த திட்டத்தில் 8 கிராம பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்புகளின் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சமுதாய முதலீட்டுக் கடன், நலிவுற்றோர் குறைப்பு நிதிக் கடன், வங்கிகடன் என ரூ 40 லட்சம் அளவிலான நிதி இணைப்புகளை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், கூட்டமைப்பின் நிர்வாகிகள், பணியாளர்கள், பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்புகளின் நிர்வாகிகள், பணியாளர்கள், மகளிர் உதவிக்குழு சுய உறுப்பினர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்