நில ஆக்கிரமிப்பு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்

துறை அலுவலர்களுக்கு அரசு உத்தரவுஅரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவையில் போலி பத்திரம் மூலம் நிலங்கள் அபகரிப்பு தொடர்கிறது.

அரசுக்கு சொந்தமான இடங்கள், கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது என பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது.

அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் புதுவை அரசின் அனைத்து துறை அலுவலர்களுக்கும், தலைமை செயலரின் சிறப்பு பணி அலுவலர் பங்கஜ்குமார் ஜா ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

அனைத்து துறை தலைவர்களும் தங்கள் துறையின் கீழ் உள்ள அனைத்து அரசு நிலங்களின் இருப்பு விபரங்கள், ஆக்கிரமிப்பு இருந்தால் அதன் விபரங்களை அளிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை, தற்போதைய நிலை ஆகியவற்றை திட்டம், ஆராய்ச்சித்துறை பரிந்துரைத்த விண்ணப் பத்தில் சமர்பிக்க வேண்டும். தேவையான விபரங்களை வரும் 13 தேதிக்குள் திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறையில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com