search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்-அனைத்து மீனவ சங்கம் குற்றச்சாட்டு
    X

    கோப்பு படம்.

    மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்-அனைத்து மீனவ சங்கம் குற்றச்சாட்டு

    • புதுவை கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தில் மீனவர்களுக்கு என்ன வேண்டும் என அனைத்து மீனவ சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • மீனவர்களின் வாழ்விடங்களும் வாழ்வாதார இடங்களும் பறிபோகும் நிலை உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தில் மீனவர்களுக்கு என்ன வேண்டும் என அனைத்து மீனவ சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதுவை அனைத்து மீனவ சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கூட்டத்துக்கு பின்னர் அனைத்து மீனவ சங்க நிர்வாகிகள் சந்திரன், ஆறுமுகம், ராஜ்குமரன், மாசிலாமணி, பெரியாண்டி, குமார், தேவநாதன், செல்வகுமாரி மற்றும் வீரமணி ஆகியோர் கூட்டம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசாங்கம் கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தின் மூலமாக கடலிலும் கடற்கரையிலும் பல திட்டங்களுக்கு இடம் பிடிக்க முயற்சிக்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்விடங்களும் வாழ்வாதார இடங்களும் பறிபோகும் நிலை உள்ளது. ஏற்கனவே செயல்படுத்தப் பட்ட திட்டங்களினால், கடற்கரை கிராமங்களில் இடப்பற்றாக் குறை ஏற்பட்டு எதிர்கால மீனவர்களின் வாழ்வு கேள்விக் குரியாகியிருக்கிறது.

    எனவே மீனவர்களுக்கு கடலும் மிச்சம் இருக்கிற கடற்கரையும் அப்படியே வேண்டும், அதில் ஒரு பிடி மண்ணைக் கூட அரசாங்கமோ தனியாரோ எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த மண்ணும் கடலும் அவர்களுடைய அடுத்த தலைமுறைகளுக்கு வேண்டும். எனவே தற்போது வெளியிடப் போகும் கடற்கரை ஒழுங்கு முறை திட்டத்தில், கடலில் இருந்து ஆயிரம் மீட்டர் தூரத்திற்குள் உள்ள அத்தனை நிலப் பரப்பும் மீனவர்கள் வாழ்விடங்களுக்கும், தொழில் செய்வதற்கும் மட்டுமே ஒதுக்கப் படவேண்டும். கடல் முழுக்க மீன் பிடி தொழிலுக்கு மட்டுமே பயன் படுத்தப் பட வேண்டும். இந்த இடங்களில் எந்த ஓரு அரசு மற்றும் தனியார், வர்த்தக அல்லது சுற்றுலாத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.

    வெளியிட இருக்கும் கடற்கரை ஒழுங்கு முறை திட்ட நகலை எளிய தமிழில் அச்சிட்டு வெளியிட வேண்டும். அதில் எல்லா கிராமங்களின் பெயரையும் தொழிற் செய்யும் இடங்களையும் பதிவு செய்ய வேண்டும். மீத முள்ள இடங்களையும் மீனவர்களின் எதிகால தேவைக்கு என்றே குறியிட்டு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×