search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கண்லென்ஸ் பொருத்துதல் பயிலரங்கு-டீன் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்
    X

    நிகழ்ச்சியை கல்லூரி டீன் டாக்டர் செந்தில்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த காட்சி.

    கண்லென்ஸ் பொருத்துதல் பயிலரங்கு-டீன் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்

    • கண் ஒளியல் பிரிவு சார்பில் மேம்படுத்தபட்ட லென்ஸ் பொருத்துதல் பயிலரங்கு நடத்தப்பட்டது.
    • ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி கண் மருத்துவ துறை தலைவர் பேராசிரியர் மிஷ்ரா ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் ஆறு படைவீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் கண் ஒளியியல் பிரிவில் மேம்படுத்தபட்ட லென்ஸ் பொருத்துதல் பயிலரங்கு நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். இயக்குநர் பொறுப்பு ஆண்ட்ரு ஜான் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினர்களாக சென்னை கோர் இனவேஷன் நிறுவனத்தின் இயக்குநர் மகேஷ்வரி, ஆவடி ஐ ஆப்டோமெட்ரி மருத்துவமனையின் இயக்குனர் சவிதா, ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி கண் மருத்துவ துறை தலைவர் பேராசிரியர் மிஷ்ரா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    இப்பயிலரங்கில் ஜிப்மர் , புதுவை சமுதாயக் கல்லூரி, சென்னை சத்ய சாய் மருத்துவக் கல்லூரி, பிரிஸ்ட் யுனிவர்சிட்டி, புதுவை மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கண் ஒளியியல் பிரிவு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியின் முடிவில் பங்குபெற்ற மாணவர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை கண் ஒளியியல் பிரிவு ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் தமிழ் சுடர், புதுவை அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை கண் ஒளியியல் பிரிவு ஒருங்கி ணைப்பாளர், துணை பேராசிரியர் வெண்ணிலா, நிர்வாக அதிகாரி சந்துரு, கண் ஒளியியல் துறையின் விரிவுரையாளர்கள் ஐயம்மா, அன்புநிலவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×