என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
புதிய மின் கம்பம் அமைக்கும் பணி-அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட அப்துல் கலாம் குடியிருப்பு பகுதியில் மின் கம்பங்கள் சேதமடைந்து மின் விளக்குகள் எரியாமல் இருந்து வந்தன.
- இதையடுத்து அப்பகுதி மக்கள் புதிய மின் கம்பங்கள் அமைத்து மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தருமாறு தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட அப்துல் கலாம் குடியிருப்பு பகுதியில் மின் கம்பங்கள் சேதமடைந்து மின் விளக்குகள் எரியாமல் இருந்து வந்தன.
இதனால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டதால் சில சமூக விரோதிகள் மது அருந்துவதற்கும் குற்ற செயல்களுக்கும் பயன்படுத்தி வந்தனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் புதிய மின் கம்பங்கள் அமைத்து மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தருமாறு தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் மின் துறை சார்பில் ரூ.15 லட்சம் செலவில் புதிய மின் கம்பங்கள் அமைத்தல், புதிய மின் விளக்குகள் பொறுத்தி பராமரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது.
இதில் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
இதில் பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் வல்லவன், துணை பொறியாளர் மோகன்ராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்