search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குழந்தைகள் பூங்காவில் தூய்மை பணி
    X

    தூய்மை பிரச்சாரத்தின் போது எடுத்த படம்.

    குழந்தைகள் பூங்காவில் தூய்மை பணி

    • புதுவை தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில் தூய்மை பிரச்சாரம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகளை செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில் தூய்மை பிரச்சாரம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இதுவரை 67 ஆயிரம் இடங்களில் தூய்மை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக புதுவையில் உள்ள தேசிய புள்ளியியல் துணை மண்டல அலுவலக கள செயல் பாட்டு பிரிவு சார்பில் புதுவை இந்திரா காந்தி குழந்தைகள் பூங்காவில் உதவி இயக்குனர் அமெலியா பெட்ஸி தலைமையில் கள மேற்பார்வையாளர்கள், களப்பணியாளர்கள் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகளை செய்தனர். இதன் மூலம் நமது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களை தூய்மையாக வைத்து தேசத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

    Next Story
    ×