என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
சாவியுடன் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக் திருட்டு
- மோட்டார் சைக்கிளின் சாவியை வண்டியிலேயே திறந்து வைத்து விட்டு வீட்டில் பணம் எடுக்க சென்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே திருவாண்டர்கோவில் இந்திராநகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை அவரது மனைவி ஜெயராணி பயன்படுத்தி வந்தார்.தினமும் ஜெயராணி மூங்கில்பட்டில் உள்ள தனது தாய்க்கு மோட்டார் சைக்கிளில் சென்று மதிய சாப்பாடு கொடுத்து விட்டு வருவது வழக்கம்.
அதுபோல் சம்பவத்தன்று மதியம் ஜெயராணி தனது தாயாருக்கு சாப்பாடு கொடுக்க மோட்டார் சைக்கிளில் செல்ல தயாரானார்.
அப்போது வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால் மோட்டார் சைக்கிளின் சாவியை வண்டியிலேயே திறந்து வைத்து விட்டு வீட்டில் பணம் எடுக்க சென்றார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் ஜெயராணி திடுக்கிட்டார். யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளின் சாவியை திறந்து வைத்துவிட்டு சென்றதை நோட்டமிட்டு மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஜெயராணி திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்