search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வேளாண் பட்டதாரி அலுவலர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்
    X

    கோப்பு படம்.

    வேளாண் பட்டதாரி அலுவலர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

    • 12-ந் தேதி தொடங்குகின்றனர்
    • 32 ஆண்டு வரை பணிபுரிந்துள்ள தகுதியா னவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண் பட்டதாரி அலுவலர்கள் நலச்சங்க செயலாளர் வினோத் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் துறையில் கண்காணிப்பு பணியி டங்களான வேளாண் துணை இயக்குனர் 14, இணை இயக்குனர் 6, கூடுதல் வேளாண் இயக்குனர் 4 பதவிகள் பல ஆண்டாக காலியாக உளளது. பதவி உயர்வு வழங்க நிர்வாகம் தவறி வருகிறது.

    கீழ்நிலையில் பதவி உயர்வுக்கான தகுதிவாய்ந்த அதிகாரிகள் இருந்தும் பதவி உயர்வு வழங்கவில்லை.

    எனவே இன்று (திங்கள்கிழமை) கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். நாளை (செவ்வாய்க்கிழமை) அலுவலக நுழைவு வாயிலில் கூட்டமும், 6-ந் தேதி வேலைநிறுத்தம், 7-ந் தேதி ஒட்டுமொத்த விடுப்பு எத்தல், 8-ந் தேதி இயக்குனரகத்தில் ஒரு நாள் உள்ளிருப்பு போராட்டம், 11-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்ப டுகிறது.

    மேலும் 12-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். எனவே 32 ஆண்டு வரை பணிபுரிந்துள்ள தகுதியா னவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×