search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஊழியரிடம் செல்போன் பறித்து சென்ற வாலிபர்
    X

    கோப்பு படம்.

    ஊழியரிடம் செல்போன் பறித்து சென்ற வாலிபர்

    • மதகடிப்பட்டு வார சந்தையில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • வாரச்சந்தைக்கு சென்று கோதண்டராமன் காய்கறிகளை வாங்கிகொண்டு சந்தை எதிரே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு வார சந்தையில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருபுவனை அருகே திருபுவனை பாளையம் சேது நகரை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது48). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வாரந்தோறும் மதகடிப்பட்டு சந்தைக்கு சென்று வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வருவது வழக்கம்.

    அதுபோல் வாரச்சந்தைக்கு சென்று கோதண்டராமன் காய்கறிகளை வாங்கிகொண்டு சந்தை எதிரே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென கோதண்டராமனிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த கோதண்டராமன் அந்த வாலிபரை பிடிக்க பின் தொடர்ந்து ஓடினார். ஆனால் அந்த வாலிபர் மின்னல் வேகத்தில் இருளில் சென்று தப்பியோடி விட்டார். இதனால் செல்போனை பறி கொடுத்த கோதண்டராமன் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×