3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

அன்னை தெரசாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடை செய்யப்படும்.பராமரிப்பு மற்றும் தொட்டியை கழுவும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற் பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி பூமியான் பேட்டையில் உள்ள கீழ்நிலை நீர் தேக்க தொட்டியில் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் வருகிற 6-ந் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே அன்றைய தினம் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை பூமியான்பேட்டை, விக்டோரியா நகர், ஜவகர் நகர், பாவாணர் நகர், ஜான்சிநகர்,

ராகவேந்திரா நகர், கோடி சுவாமிகள் நகர், பொன் நகர், சுதாகர் நகர், சரநாராயணா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடை செய்யப்படும்.

இதே போல் வருகிற 7-ந் தேதி முருங்கப்பாக்கம் அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள கீழ்நிலை, மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அன்றைய தினம் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை அரவிந்தர்நகர், அங்காளம்மன் நகர், ரங்கசாமி நகர், பள்ளத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோ கம் தடை செய்யப்படும்.

இதே போல் வருகிற 8-ந் தேதி முருங்கப்பாக்கம் திரவு பதியம்மன் கோவில் அருகில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், முருங்கப்பாக்கம் பேட்டில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் பராமரிப்பு மற்றும் தொட்டியை கழுவும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே அன்றைய தினம் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை சேத்திலால் நகர், கணபதி நகர், முருங்கபாக்கம் பேட், அன்னை தெரசாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com