search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    14 பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்
    X

    கோப்பு படம்.

    14 பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்

    • தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம்.
    • திரளான பேர் கலந்து கொண்டு கிராமசபை கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -

    அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு காக்காயன்தோப்பு, வீராம்பட்டினம், மணவெளி, நல்லவாடு, அபிஷே கப்பாக்கம், டி. என்.பாளையம் உள்ளிட்ட14 கிராம பஞ்சாயத்து பகுதிகளில் மே1-ந் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டம் 10 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இக் கூட்டத்தில் தெரிவிக்கலாம்.

    எனவே பொதுமக்கள், மகளிர் குழு, கிராம வளர்ச்சி சங்க உறுப்பினர்கள், இளைஞர்கள் என திரளான பேர் கலந்து கொண்டு கிராமசபை கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×