“அமெரிக்கா இல்லாமல், நேட்டோ ஒரு காகிதப் புலி!” - ட்ரம்ப்

சமீப நாட்களாக நேட்டோ மீதான தனது தாக்குதல்களை ட்ரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார்.
“அமெரிக்கா இல்லாமல், நேட்டோ ஒரு காகிதப் புலி!” - ட்ரம்ப்
Published on

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு உதவாத நேட்டோ கூட்டாளிகளை 'கோழைகள்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

"அமெரிக்கா இல்லாமல், நேட்டோ ஒரு காகிதப் புலி!" என்றும் டிரம்ப் தனது 'ட்ரூத்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் “அணுசக்தியால் இயங்கும் ஈரானைத் தடுக்கும் போராட்டத்தில் அவர்கள் சேர விரும்பவில்லை. இப்போது, ​​அவர்களுக்கு மிகக் குறைந்த ஆபத்துடன், அந்தப் போராட்டம் இராணுவ ரீதியாக வெல்லப்பட்டுவிட்ட நிலையில், தாங்கள் செலுத்த நிர்பந்திக்கப்படும் அதிக எண்ணெய் விலைகளைப் பற்றிப் புகார் கூறுகிறார்கள்.

ஆனால், அந்த அதிக எண்ணெய் விலைகளுக்கு ஒரே காரணமாக இருக்கும் ஒரு எளிய இராணுவ நடவடிக்கையான ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்க உதவ அவர்கள் விரும்பவில்லை. மிகக் குறைந்த ஆபத்துடன், இதைச் செய்வது அவர்களுக்கு மிகவும் எளிது. கோழைகள், நாங்கள் இதை நினைவில் கொள்வோம்!” என நேட்டோ உறுப்பு நாடுகளை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு நடவடிக்கைக்கு முன்பு, டிரம்ப் உதவுமாறு வலியுறுத்திய எந்த நாடுகளும்  ஈரான் மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட மறுத்துவிட்டன.

இதனால் சமீப நாட்களாக நேட்டோ மீதான தனது தாக்குதல்களை ட்ரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார்.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, வளைகுடா பிராந்தியம் முழுவதும் தெஹ்ரான் பதிலடித் தாக்குதல்களை தொடர்ந்துவருகிறது.

மேலும் ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியுள்ளது. இதனால் உலகெங்கும் எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com