என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல்: ஹவுதிக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
- செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் நடத்தி வருகிறது.
- கப்பல்களை தாக்கி அதில் உள்ள மாலுமிகள் உள்ளிட்டோரை சிறைப்பிடிக்கவும் செய்கின்றனர்.
ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் அறிவித்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ்க்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சி குழு செங்கடலில் செல்லும் சர்வதேச கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் அமெரிக்கா செங்கடலில் கண்காணிப்பை அதிகரித்துள்ளது. டிசம்பர் 19-ந்தேதியில் இருந்து 23 தாக்குதல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர்.
கடந்த ஒருசில தினங்களுக்கு முன் கப்பல் மீது தாக்குதல் நடத்த வந்த ஹவுதியின் மூன்று படகுகளை அமெரிக்க கப்பற்படை தாக்கி அழித்தது. இதில் 10 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்தனர். கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுப்போம் என ஹவுதி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்த வேண்டும். இல்லையெனில் ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் அறிவித்துள்ளன.
தாக்குதல் தொடர்ந்தால் எந்தவிதமான பதிலடியில் ஈடுபடும் என்பது குறித்து அமெரிக்காவின் உயர்அதிகாரி விரிவாக தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளிடம் இருந்து ஹவுதி கிளார்ச்சியாளர்கள் மற்றொரு எச்சரிக்கையை எதிர்பார்க்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், பெல்ஜியம், கனடா, டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒன்று இணைந்துள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்