என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
மோடியிடம் கேள்வி கேட்டதற்காக பத்திரிகையாளரை அச்சுறுத்துவதா?: வெள்ளை மாளிகை கண்டனம்
- மோடியிடம் இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமை குறித்த கேள்வியால் விமர்சனம்
- இந்திய அமைச்சர்கள் ஒபாமா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்
இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சுற்றுப் பயணத்தின்போது பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பெண் பத்திரிகையாளர் ஒருவர் இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமை குறித்து கேள்வி கேட்டார். இதற்கு இந்தியாவில் இன ரீதியாக பாகுபாடு இல்லை என பதில் அளித்திருந்தார்.
இதற்கிடையே அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, ஜோ பைடன் மோடியிடம் இதே கருத்தை வலியுறுத்த வேண்டும் எனவும், நானாக இருந்தால் வலியுறுத்துவேன் என்றும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்புக்கு முன் தெரிவித்திருந்தார்.
ஒபாமா கூறிய அதே கருத்தை அந்த பத்திரிகையாளர் எழுப்பியதால், ஆன்லைனில் பத்திரிகையாளர் அச்சுறுத்தப்படுவதுடன், துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ''பத்திரிகையாளர் ஆன்லைன் துன்புறுத்தலுக்கு ஆளாவது குறித்து நாங்கள் அறிவோம். இது ஏற்றுக் கொள்ள முடியாதது'' எனத் தெரிவித்துள்ளது.
மேலும், பத்திரிகையாளர் எந்தவொரு சூழ்நிலையிலும் எந்தவொரு துன்புறத்தலுக்கு உள்ளாவதை நாங்கள் கண்டிக்கிறோம். பத்திரிகையாளர்களை துன்புறுத்துபவர்கள் ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரானவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்