search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நேபாளத்தில் தொடரும் விமான விபத்துக்கள்
    X

    நேபாளத்தில் தொடரும் விமான விபத்துக்கள்

    • 2016-ம் ஆண்டு தாரா விமான நிறுவனத்தின் விமானம் முஸ்டாங் மாவட்டத்தில் விபத்தில் சிக்கியதில் பணியாளர்கள் உள்பட 23 பேர் பலியானார்கள்.
    • 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா-பங்களா ஏர் விமானம் திருபுவன் சர்வதேச விமான நிலைய முனையத்தில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் இருந்த 51 பேரும் பலியானார்கள்.

    சீரற்ற வானிலையாலும், மோசமான நிலப்பரப்புகளுக்கு இடையே ஓடுதளப் பாதை அமைந்துள்ளதாலும் நேபாளத்தில் அடிக்கடி விமான விபத்துக்கள் ஏற்படுகிறது. நேபாளத்தில் இதற்கு முன்பு நடந்த விமான விபத்துக்கள் வருமாறு:-

    * 2012-ம் ஆண்டு மே மாதம் 14-ந்தேதி, பொக்காராவில் இருந்து ஜோம்சோம் நோக்கி சென்ற விமானம் ஜோம்சோம் அருகே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 15 பேர் இறந்தனர்.

    * 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருபுவன் சர்வதேச விமான முனையத்தில் சீத்தா ஏர் விமானம் அவசரமாக தரை இறங்கும்போது விழுந்து நொறுங்கியதில் 19 பேர் பலியானார்கள்.

    * 2016-ம் ஆண்டு தாரா விமான நிறுவனத்தின் விமானம் முஸ்டாங் மாவட்டத்தில் விபத்தில் சிக்கியதில் பணியாளர்கள் உள்பட 23 பேர் பலியானார்கள்.

    * 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா-பங்களா ஏர் விமானம் திருபுவன் சர்வதேச விமான நிலைய முனையத்தில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் இருந்த 51 பேரும் பலியானார்கள்.

    * 2022-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி முஸ்டாங் மாவட்டத்தில் தாரா விமான நிறுவன விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 இந்தியர்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.

    Next Story
    ×