மெக்சிகோவில் உணவு நிறுவனம் மீது குண்டு வீச்சு- 9 பேர் பலி

குண்டு வெடித்ததில் ஊழியர்கள், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். போலீஸ் விசாரணையில் முன் விரோதம் காரணமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மெக்சிகோவில் உணவு நிறுவனம் மீது குண்டு வீச்சு- 9 பேர் பலி
Published on

மெக்சிகோவின் டொலுகா நகரில் உள்ள மொத்த உணவு வினியோக நிறுவனத்துக்குள் புகுந்து மர்மநபர்கள் வெடிகுண்டுகளை வீசினர். இதில் குண்டுகள் வெடித்து தீப்பிடித்தது. இதனால் ஊழியர்கள், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கடுமையாக போராடி அணைத்தனர். இந்த தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். ஒருவர் படுகாயம் அடைந்தார். போலீஸ் விசாரணையில் முன் விரோதம் காரணமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com