search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்
    X

    கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்

    • மிசிகாகாவில் உள்ள ராமர் கோவில் இந்தியாவுக்கு எதிரானவர்களால் சிதைக்கப்பட்டதை இந்திய தூதரகம் கடுமையாக கண்டிக்கிறது.
    • கடந்த ஜனவரி மாதம் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    கனடாவின் மிசிகாகா மாகாணத்தில் ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சுவரில் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை மர்ம நபர்கள் எழுதி இருந்தனர்.

    இச்சம்பவத்துக்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தூதரகம் டுவிட்டரில் கூறும்போது, மிசிகாகாவில் உள்ள ராமர் கோவில் இந்தியாவுக்கு எதிரானவர்களால் சிதைக்கப்பட்டதை கடுமையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கனடா அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

    கடந்த ஜனவரி மாதம் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×