எனது நிர்வாகத்தால் இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டது: டிரம்ப் பெருமிதம்

இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம்.இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்தோம்.
எனது நிர்வாகத்தால் இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டது: டிரம்ப் பெருமிதம்
Published on

இந்தியா -பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முடிவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்த் அவர் கூறியதாவது:-

இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இந்தியாவிற்கும்- பாகிஸ்தானுக்கும் இடையே நிரந்தரமான போர் நிறுத்தம் என்று நான் நினைக்கிறேன்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதனால் பல லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க கூடும். இந்த போரை நிறுத்த உதவிய துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவு அமைச்சர் ரூபியோவுக்கு நன்றி.

இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்தோம். சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம். வர்த்தகத்தை தன்னைப் போல யாரும் பயன்படுத்தியதில்லை.

இந்தியாவுடன் தற்போது வர்த்தகப் பேச்சு நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுடன் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும். அது தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமைகள் அசைக்க முடியாதவை மற்றும் சக்தி வாய்ந்தவை. உண்மையில் இந்தியா- பாகிஸ்தான் தலைவர்கள் சூழ்நிலையின் தீவிரத்தை முழுமையாக அறிந்து புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைக் கொண்டவர்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com