என் மலர்
உலகம்

ஸ்பெயினில் 2 அதிவிரைவு ரெயில்கள் மோதிய விபத்தில் 21 பேர் உயிரிழப்பு
- மாலகா மற்றும் மாட்ரிட் இடையே 300 பயணிகள் பயணித்த ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
- ரெயில் தடம் புரண்ட விபத்தில் படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஸ்பெயினின் கார்டோபா மாகாணத்தில் மலகா அருகே தனியார் நிறுவனத்தின் அதிவிரைவு ரெயில் ஒன்று தடம் புரண்டு மற்றொரு ரெயில் மீது மோதியதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாலகா மற்றும் மாட்ரிட் இடையே 300 பயணிகள் பயணித்த ரெயில் நேற்று இரவு 7:45 மணியளவில் கோர்டோபா அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அப்போது தடம் புரண்ட ரெயில் மீது மாட்ரிட்டிலிருந்து தெற்கு ஸ்பெயின் நகரமான ஹுயல்வாவுக்கு சுமார் 200 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த மற்றொரு ரெயில் மோதியது.
ரெயில் தடம் புரண்ட விபத்தில் படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story






