அமெரிக்காவில் சிறுவர் பூங்காவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு- 8 பேர் காயம்

துப்பாக்கி சூடு நடத்திய நபர், அப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் பதுங்கி இருந்தார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அமெரிக்காவில் சிறுவர் பூங்காவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு- 8 பேர் காயம்
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள சிறுவர் நீர் பூங்காவில் பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் பொதுமக்கள் அலறியடித்தபடி ஓடினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு சிறுவர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய நபர், அப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் பதுங்கி இருந்தார்.

அவரை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com