

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் உள்ள உயிரியல் பூங்காவில், ரஷ்ய ஆளில்லா விமானம் தாக்கியதில், முயல்கள் உயிரிழந்ததாகவும், பிற விலங்குகள் மன அழுத்தத்திற்கு உள்ளானதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
உக்ரைனின் வடகிழக்கில் உள்ள கார்கீவ் பிராந்தியத்தின் அரசு வழக்கறிஞர்கள், நூற்றுக்கணக்கான முயல்கள், பன்றிகள், எலிகள் மற்றும் சுண்டெலிகள் வளர்க்கப்பட்டு வந்த விலங்கு வளர்ப்புக்கூடம் என விவரிக்கப்பட்ட ஒரு பகுதியை ட்ரோன் தாக்கியதாகக் கூறினர்.
டெலிகிராமில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், 10 முயல்கள் கொல்லப்பட்டதாகவும், 15 முயல்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலால் அதன் அருகிலுள்ள அடைப்பிடத்தின் வெளிப்புறம் சேதமடைந்ததால், ஒரு யானை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் அல்லது பார்வையாளர்கள் என யாரும் உயிரிழக்கவில்லை.