search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷியாவில் ஆயுத கிளர்ச்சியை தூண்டுகிறார்.. கூலிப்படை தலைவர் மீது குற்றவியல் வழக்கு
    X

    ரஷியாவில் ஆயுத கிளர்ச்சியை தூண்டுகிறார்.. கூலிப்படை தலைவர் மீது குற்றவியல் வழக்கு

    • வழியில் குறுக்கிடும் எல்லாவற்றையும் எங்கள் படைகள் அழிக்கும் என்று கூலிப்படை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • வாக்னர் கூலிப்படைகள் ரஷியா நோக்கி புறப்பட்டுச் செல்வதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

    உக்ரைனில் சண்டையிட்டு வந்த ரஷிய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷிய ராணுவத்திற்கு எதிராக திரும்பியதால் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது. ரஷிய ராணுவ தலைமையை கவிழ்க்கவும் தயாராகி வருகிறது.

    நாட்டின் ராணுவ தலைமையை கவிழ்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளதாக வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தெரிவித்துள்ளார். ராணுவ தலைமைக்கு (பாதுகாப்புத்துறை மந்திரி) எதிரான போராட்டத்தில், வழியில் குறுக்கிடும் எல்லாவற்றையும் எங்கள் படைகள் அழிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து வாக்னர் கூலிப்படைகள் ரஷியா நோக்கி புறப்பட்டுச் செல்கின்றன. இதனால் உள்நாட்டுப் போருக்கான சூழல் உருவாகி உள்ளது.

    வாக்னர் கூலிப்படையினர் ரஷியாவின் முக்கிய நகரங்களை நோக்கி புறப்பட்டுச் செல்வதால், மாஸ்கோவின் முக்கிய பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாஸ்கோவில் இரு படைகளும் நெருங்கும் சமயத்தில் மோதல் வெடிக்கலாம்.

    இந்நிலையில், வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் மீது குற்றவியல் நடவடிக்கையை ரஷிய அரசு தொடங்கி உள்ளது. ஆயுதமேந்திய கிளர்ச்சியைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் பிரிகோசின் மீது பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், வாக்னர் குழு தனது சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அரசின் செய்தி நிறுவனம் டி.ஏ.எஸ்.எஸ். செய்தி வெளியிட்டிருக்கிறது. எவ்ஜெனி பிரிகோசினை கைது செய்து குற்றவியல் நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைப்புகளும் கூறி உள்ளன.

    Next Story
    ×