ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவு

நிலப்பரப்பிலிருந்து 15 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணர்வு.சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவு
Published on

ஆப்கானிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தானிம் மசார் இ சரீஃப் என்ற நகரத்தில் இன்று மாலை 4.50 மணியளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன் ரிக்டர் அளவ 5.1 ஆக பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ள இந்தியாவின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம், நிலப்பரப்பிலிருந்து 15 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்களால் பொது மக்கள் பீதியமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com