மெட்டாவில் லே ஆப்: புதிய AI பணிகளுக்கு இடமாற்ற திட்டம்!

மெட்டா நிறுவனம் வேலைகளைக் குறைத்து, கட்டமைப்பை மறுசீரமைப்பதால் 8,000 ஊழியர்கள் AI பணிகளுக்கு மாறவுள்ளனர்.
மெட்டாவில் லே ஆப்:
புதிய AI பணிகளுக்கு இடமாற்ற திட்டம்!
Published on

ஃபேஸ்புக்கின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் தற்போது தனது ஆட்குறைப்புத் திட்டங்களை வெளியிட்டுள்ளது.

உலகளாவிய அளவில் தனது பணியாளர் குறைப்புகளுடன், நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) பணிப்பாய்வுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஒர் புதிய சுற்று அமைப்புசார் மாற்றங்களும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.

தற்போது தனது 10% ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது என்றும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் கூடுதல் ஆட்குறைப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது.

உலகளவில் சுமார் 8,000 ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்

இந்த பணிநீக்கப் பணிகள் மே 20 ஆம் தேதிக்குப் பிறகு தொடங்குகின்றன.

மேலும் இந்நிறுவனம் கிட்டத்தட்ட 7,000 ஊழியர்களை செயற்கை நுண்ணறிவு பணிப்பாய்வுகள் தொடர்பான புதிய முயற்சிகளுக்கு மாற்றவும், மேலாண்மைப் பதவிகளை நீக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஊழியர்களிடம் தெரிவித்தது.

AI உதவியால் பல பணிகளை தானியங்கி முறையில் செய்ய முடியும் என்பதால் பெரிய அளவிலான மனித ஊழியர்களின் தேவை குறையும் நிலை உருவாகியுள்ளது.

இதனால் நிறுவனம் சிறிய, திறமையான குழுக்களை மட்டும் வைத்துக்கொண்டு செயல்திறனை அதிகரிக்கவும், செலவுகளை குறைக்கவும் திட்டமிடுகிறது.

ஆட்குறைப்பு உறுதிசெய்யப்பட்ட அதே நேரத்தில், மெட்டா நிறுவனம் அமெரிக்க ஊழியர்களுக்குச் சொந்தமான நிறுவனக் மடிக்கணினிகளில் கட்டாயக் கண்காணிப்பு மென்பொருளை நிறுவியது.

நிறுவனத்திற்குள் மாதிரித் திறன் முன்முயற்சி (Model Capability Initiative) அல்லது எம்.சி.ஐ (MCI) என்று அழைக்கப்படும் இந்தக் கருவி, ஒரு மனிதன் செய்வது போலவே பணிகளைச் செய்ய ஏ.ஐ (AI) மாடல்களுக்குப் பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன், ஊழியர்கள் தட்டச்சு செய்வதையும் கிளிக் செய்வதையும் பதிவு செய்கிறது.

இந்தக் கண்காணிப்புக் கருவி அமெரிக்காவிற்கு வெளியே அறிமுகப்படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம், மற்ற நாடுகளில் உள்ள கடுமையான தனியுரிமைச் சட்டங்கள் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புகளே என்று பல ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com