மாலியில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் - 70-க்கும் மேற்பட்டோர் பலி

மாலியின் பாதுகாப்பு அமைச்சர் சாடியோ காமாரா கொல்லப்பட்டார்.
மாலியில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் -  70-க்கும் மேற்பட்டோர் பலி
Published on

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் தொடர் பயங்கரவாத தாக்குதல்களில் 70-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

கடந்த புதன்கிழமை நடந்த தாக்குதலில் 24 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமையும் மீண்டும் தாக்குதல்கள் தொடர்ந்தன.

இந்தக் கொடூரத் தாக்குதல்களுக்கு அல்-கொய்தாவுடன் தொடர்புடைய 'ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல் முஸ்லிமீன்' என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தங்களது நிபந்தனைகளுக்கு உடன்பட மறுக்கும் கிராமங்களை இலக்கு வைத்து இந்த அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது.

மாலியின் தலைநகர் பாமகோவிற்கு அருகிலுள்ள மத்திய சிறைச்சாலையை ஆயுதமேந்திய போராளிகள் தாக்கியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நகரங்களை முற்றுகையிடப் போவதாகவும் தீவிரவாத அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

முன்னதாக கடந்த வாரம் தாக்குதலில் மாலியின் பாதுகாப்பு அமைச்சர் சாடியோ காமாரா கொல்லப்பட்டார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com