என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தோனேசியாவில் சோகம்: கல் குவாரியில் பாறை சரிந்து விபத்தில் 14 பேர் பலி
    X

    இந்தோனேசியாவில் சோகம்: கல் குவாரியில் பாறை சரிந்து விபத்தில் 14 பேர் பலி

    • இந்தோனேசியாவின் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டது
    • 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தின் சிரேபன் நகரத்தில் சுண்ணாம்புக் கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர்கள் பலர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த கல் குவாரியில் நேற்று காலை பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் ஏராளமான எந்திரங்கள் பாறைகளுக்குள் புதைந்தன.

    இச்சம்பவத்தில் 14 தொழிலாளர்கள் பலியாகினர். ஏராளமானோர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அந்தக் கல் குவாரி சட்டப்படி உரிய அனுமதிகள் பெற்று இயங்கி வந்தாலும், அங்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லை என மேற்கு ஜாவா கவர்னர் டெடி முல்யாடி தெரிவித்தார்.

    கல் குவாரியில் பாறை விழுந்து 14 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×