

வடகொரியா நாடாளுமன்றத் தேர்தலில் 99.97% வாக்குகள் பெற்று அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அபார வெற்றி பெற்றார். வெறும் 0.07% எதிர்ப்புடன் அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் வெற்றி பெற்றார்.
ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக யாரும் போட்டியிடாததால், வேட்பாளரின் பெயரை பேனாவால் அழித்து சிலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
1957 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக எதிர்ப்பு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜூ ஆய், கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசாக உருவெடுத்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே அவர் தனது தந்தையுடன் பல முக்கிய பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது