2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம்: அச்சத்தில் ஜப்பான் மக்கள்

டோகாரா தீவில் கடந்த 2 வாரத்தில் 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகின.மிகப் பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாகப் பதிவானது.
2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம்: அச்சத்தில் ஜப்பான் மக்கள்
Published on

டோக்கியோ:

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளதால் அடிக்கடி அங்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது.

அதன்படி, அங்குள்ள டோகாரா தீவில் கடந்த 2 வாரங்களில் அங்கு 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன. இதில் மிகப் பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாகப் பதிவானது. இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

அதேசமயம், எப்போது வேண்டுமானாலும் வெளியேற தயாராக இருக்குமாறு பொதுமக்களை அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.

இதற்காக, டோகாரா கடற்கரை பகுதியில் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. எனினும் இந்த நிலநடுக்கத்தால் அங்கு வசிக்கும் மக்கள் பீதியில் உறைந்து காணப்படுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com