

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்க ராணுவம், நைஜீரிய அரசு படைகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தளபதியான அபு-பிலால் அல்-மினூகி பலியாகி உள்ளார்.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:-
எனது வழிகாட்டுதலின்படி துணிச்சலான அமெரிக்கப் படைகளும் நைஜீரியாவின் ஆயுதப்படைகளும் உலகில் மிகவும் தீவிரமான பயங்கரவாதியை போர்க்களத்திலிருந்து ஒழிக்கும் பணியை நிறைவேற்றி உள்ளனர்.
உலகளவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் 2-வது தளபதியான அபு-பிலால் அல்-மினூகி ஆப்பிரிக்காவில் ஒளிந்துகொள்ளலாம் என்று நினைத்தார். ஆனால் அவர் பற்றிய தகவல்களை உளவாளிகள் எங்களிடம் தெரிவித்து கொண்டிருந்தனர் என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
அவர் இனி ஆப்பிரிக்க மக்களை அச்சுறுத்தவோ அல்லது அமெரிக்கர்களைக் குறிவைக்கும் நடவடிக்கைகளைத் திட்டமிட உதவவோ மாட்டார். அபு-பிலால் அல்-மினூகி கொல்லப்பட்டதன் மூலம் ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பின் உலகளா விய செயல்பாடு பெருமளவில் குறைந்துள்ளது. இந்த நடவடிக்கையில் பங்களிப்பை அளித்த நைஜீரியா அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார்.
அபு-பிலால் அல்-மினுகி ஆப்பிரிக்காவின் சஹேல் பிராந்தியத்தில் ஐ.எஸ்.ஐஎ.ஸ். பயங்கரவாதக் குழுவின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒரு மூத்த தலைவர் ஆவார். மேலும் அந்த அமைப்பின் சர்வதேச கட்டமைப்பில் முக்கிய நபராக இருந்து வந்தார்.