

ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல் கடந்த பிப்ரவரி 28 தொடங்கி ஒரு மாதத்தை கடந்து நீடித்து வருகிறது.
ஈரானும் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த சூழலில் ஈரான் தலைநகர் தெஹ்ரானின் பஹ்ரெஸ்தான் கவுண்டியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் அமெரிக்க-இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் ஆறு குழந்தைகள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுமிகளும் இரண்டு சிறுவர்களும் அடங்குவர் எனத் தெரியவந்துள்ளது.
அதேபோல் கோம் நகரிலும், ஷெரிஃப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திலும் தாக்குதல்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதற்றங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது ட்ரூத் ஷோசியல் பதிவில் டிரம்ப், "செவ்வாய்க்கிழமை, இரவு 8:00 மணி (கிழக்கு நேரப்படி)" என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கு ஈரானுக்கு அவர் நிர்ணயித்த காலக்கெடு இதுவாகும்.
ஒருவேளை ஜலசந்தியை திறக்கவில்லை என்றால் ஈரானுக்கு நரகத்தை காட்டுவோம் என டிரம்ப் முன்னதாக கூறியிருந்தார். பதிலுக்கு ஈரானும் நகரத்தை காட்டுவோம் என பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.