search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    எங்கள் மீது போர் தொடுக்க நினைப்பது ஹிஸ்புல்லா செய்யும் பெரிய தவறு - எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்
    X

    எங்கள் மீது போர் தொடுக்க நினைப்பது ஹிஸ்புல்லா செய்யும் பெரிய தவறு - எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

    • இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
    • ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    நேற்றைய 16-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேலுடன் போர் தொடுக்க முற்பட்டால் அதுதான் ஹிஸ்புல்லாவின் மிகப் பெரிய தவறாகும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் நேதன்யாகு கூறுகையில், தற்போது ஹிஸ்புல்லா அமைப்பு போரில் முழுமையாக ஈடுபடுமா என்பதை என்னால் கணிக்க முடியாது. ஹிஸ்புல்லா அவ்வாறு முடிவெடுத்தால், அது வருத்தப்படும். ஹிஸ்புல்லா அமைப்பை நினைத்துக்கூட பார்க்க முடியாத சக்தியுடன் நாங்கள் தாக்குவோம். அது ஹிஸ்புல்லா மற்றும் லெபனான் அரசு ஆகிய இரண்டிற்கும் அழிவை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

    Next Story
    ×