search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சம்மதம் தெரிவிக்கும் இஸ்ரேல், எகிப்து செல்லும் ஹமாஸ் தலைவர்: காசாவில் மீண்டும் போர் நிறுத்தம்?
    X

    சம்மதம் தெரிவிக்கும் இஸ்ரேல், எகிப்து செல்லும் ஹமாஸ் தலைவர்: காசாவில் மீண்டும் போர் நிறுத்தம்?

    • பிணைக்கைதிகள் விடுவிப்பதற்கான போர் நிறுத்தம் செய்ய தயாராக இருப்பதாக இஸ்ரேல் தகவல்.
    • உயர்மட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஹமாஸ் தலைவர் எகிப்பு செல்ல இருக்கிறார்.

    ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற இஸ்ரேல் பிணைக்கைதிகளை மீட்பதற்காக காசாவில் 7 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதில் 90-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

    இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் இருந்து பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டனர். போர் நிறுத்தத்துக்கு பிறகு இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 129 பிணைக்கைதிகள் உள்ள நிலையில் காசாவில் மீண்டும் போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வருகிறது.

    காசாவில் இருந்து மேலும் கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக 2-வது மனிதாபிமான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக் தெரிவித்தார்.

    இந்த நிலையில் போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியே இன்று எகிப்துக்கு செல்கிறார்.

    .இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்கா முட்டுக்கட்டை போடுவதால் நிறைவேற முடியாத நிலையில் இருந்து வருகிறது.

    Next Story
    ×